தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக இவர் நடித்த டான் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,ப்ரின்ஸ்,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது,இதனை அடுத்து அயலான் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் அடுத்ததாக சில படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை வெளியிடுவதாக பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அறிவித்துள்ளனர்.ப்ரின்ஸ் படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம்,வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவி வந்தன.இதில் மடோன் அஷ்வின் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.இந்த இரண்டு படங்களையும் தாண்டி வேறு புது படத்தின் அறிவிப்பாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.