தனது திரைப்பயணத்தில் சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ள வைகைப்புயல் வடிவேலு அவர்கள் முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார். 

சமீபத்தில் மாமன்னன் படத்தின் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர்கள் ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், RJ விக்னேஷ் காந்த் ஆகியோருடன் விஜய் டிவி சிவாங்கி மற்றும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். 

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரட் காம்போவான பிரபுதேவா-வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடல் படப்பிடிப்பின்போது பிரபுதேவா மற்றும் வடிவேலுவின் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியானது. அந்தப் புகைப்படம் இதோ…