“நீங்கள் காதலர்களே இல்ல.. அண்ணன் - தங்கை டா” பெற்றோர்களின் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள்..

“நீங்கள் காதலர்களே இல்ல.. அண்ணன் - தங்கை டா” பெற்றோர்களின் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள்.. - Daily news

“நீங்கள் அண்ணன் - தங்கை உறவு முறை கொண்டவர்கள்” என்று கூறி, காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், இளம் பெண் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கெறி இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் காதலித்து வந்து உள்ளனர். இப்படியாக, இவர்கள் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலில் நெருக்கமாகி உள்ளனர்.

அதாவது, பெரிய குளம் அருகில் உள்ள வடகரை பட்டாப்புளி தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் 20 வயதான பெரியசாமி, கூலி வேலை செய்து வருகிறார். 

அதே போல், அந்த பகுதியை சேர்ந்த நல்லயன் என்பவரது மகள் 19 வயதான வித்தியா, அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். 

இப்படியான நிலையில் தான், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விசயம், இருவரின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டார் பெற்றோரும், “நீங்கள் காதலர்களே கிடையாது, நீங்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறையின் கீழ் வருபவர்கள்” என்று கூறி, இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், “இதற்கு மேல் என்ன செய்வது?” என்று புரியாமல், காதலர்கள் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர்.

அதன் படி, காதலர்கள் இருவரும், பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள தோட்டத்தில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். 

இதில், விஷம் குடித்து இருவரும் அந்த பகுதியில் அப்படியே மயங்கி கீழே விழுந்து கடந்து உள்ளனர்.

இதனை, அந்த வழியாக சென்ற சிலர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

ஆனால், இதில் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

அத்துடன், உயிருக்கு ஆபாத்தான நிலையில், அந்த இளைஞர் மட்டும் அருகில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தற்கொலை செய்துகொண்ட வித்தியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, இவர்கள் இருவரின் தற்கொலை குறித்தும், வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விசாரணையில் தான், “இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறை வருவதாகக் கூறி, இரு வீட்டு பெற்றோரும் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது” தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, அண்ணன் - தங்கை உறவு முறை கொண்டவர்கள் காதலித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment