சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் கண்மணி மனோகரன்.பிரபல மாடல் ஆக இருந்து விளம்பரப்படங்கள்,குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கண்மணி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட கண்மணி மனோகரன் அடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கண்மணி மனோகரன்.முதலில் வில்லி போல ஆரம்பித்த இவரது அஞ்சலி கதாபாத்திரம் பின்னர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியது.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.

சில நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று அசத்துவார் கண்மணி.ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கிய சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் கண்மணி.மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரிலும் கண்மணி ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது சீரியலில் ஹீரோயினாக நடிப்பதால் தேதிகள் பிரச்சனை காரணமாக இவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.பாரதி கண்ணம்மா தொடரில் கடந்த சில எபிசோடுகளாக இவர் வராமல் இருக்க இவரை மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.இவர் சீரியலில் இருந்து விலகியது போல ஒரு ஹிண்ட்டை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரிக்க அவரை நேரடியாக தொடர்புகொண்டோம் , சீரியலில் இருந்து விலகுவதை உறுதி செய்த கண்மணி ,புது சீரியல் ஷூட்டிங்,தனக்கு சீரியலில் முதலில் வந்தது போல போதுமான காட்சிகள் இல்லாதது போன்ற சில காரணங்ககளால் விலகுவதாக தெரிவித்தார்.தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு விரைவில் சில அறிவிப்புகளுடன் வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.