ஆகச் சிறந்த நடிகராக இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என முன்னணி கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக  ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக்-வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரமின் புகைப்படங்கள் இதோ…
 

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சியான் விக்ரம் ! 💞@chiyaan #ChiyaanVikram #Chiyaan pic.twitter.com/iKll1ebz1D

— Galatta Media (@galattadotcom) September 12, 2022