புது சீரியலின் ஒளிபரப்பு குறித்து மனம் திறந்த முன்னணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | May 21, 2021 13:23 PM IST
![புது சீரியலின் ஒளிபரப்பு குறித்து மனம் திறந்த முன்னணி சீரியல் நடிகை ! - Tamil Movie Cinema News புது சீரியலின் ஒளிபரப்பு குறித்து மனம் திறந்த முன்னணி சீரியல் நடிகை ! - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/asfcasdvbsb_1621609865.jpg)
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.
இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவதாக ரேஷ்மா தெரிவித்திருந்தார்.இது புதிய சீரியல் குறித்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் என்ற தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.
படவா கோபி இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த தொடரின் மூலம் இவர் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.நேற்று ரசிகர்களுடன் லைவில் பேசிய ரேஷ்மா இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது என்றும் இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.