பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும்,  டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்கள்.

surya

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரினை அளித்தனர்.  இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த தனம், தனது பிள்ளைகள் ஆன்லைனில் வகுப்பு படித்து வந்த போது, சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. இதனால் இது பற்றி ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்ட போது தன்னை ஆபாசமாக பேசினார் என்றும் தெரிவித்தார்.  

இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது : தனது கைபேசி  நம்பரை சமூக வலைதளங்களில்  விபச்சாரி எனக் கூறி தனித்து எண்ணை  பதிவிட்டார் என்றும் மேலும் ரவுடி பேபி சூர்யா கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து பேசி மூளைச்சலவை செய்து  அதிக பணம் தருவதாக கூறி  கட்டாயப்படுத்தி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகிறார் என்றும் மேடவாக்கத்தை சேர்ந்த தனம் தெரிவித்துள்ளார் . 

மேலும் காவல்துறை முதல்வர் என யாரிடம் சென்றாலும் ஒன்றும் செய்யமுடியாது என ரவுடி பேபி சூர்யா  தன்னை மிரட்டுவதாக தெரிவித்தார் . பல அமைச்சர்களின் பின்புலம் அவருக்கு இருக்கிறது என்றும்  இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என ரவுடி பேபி சூர்யா குறித்தான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருக்கிறது என்றும் இது குறித்து தமிழ்நாடு முதலவர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு இதுகுறித்து கவனத்தில்கொண்டு  உடனடியாக ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவேண்டும் , ஒருவேளை  செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் மேடவாக்கம் தனம் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.