“மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 25 ரூபாய் வசூலிக்கப்படும்” என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கணக்க வைத்திருக்கும் பொது மக்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணம் இன்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன், மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால், மாநகரங்களில் 3 முறையும் மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும் என்று புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதனைத் தாண்டி தங்களது வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால், தற்போது 20 ரூபாய் பணமும், மற்ற வங்கி ஏடிஎம்களின் ஒரு முறை பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 23.6 ரூபாய் கட்டணம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, ஒவ்வொரு முறையும் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

அதாவது, பொது மக்களின் பணத்தை, அவர்களுக்குத் தெரிந்து இன்னும் எடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் இன்னும் உயர்த்தப்படுகிறது. 

அதற்கு, மத்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது தான், நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 

அதன் படியாக, இலவச பரிவர்த்தனைகளைத் தாண்டி பணம் எடுத்தால் இனி பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன், இந்த இலவச பரிவர்த்தனைகளைத் தாண்டி மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 25 ரூபாய் பணம் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “செலவுகள் அதிகரித்திருப்பதால், இந்த பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த” இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே, ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்து இருக்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மற்ற வங்கிகளும் தங்களது கண்டனத்தை உயர்த்த உள்ளது பொது மக்களை இன்னும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வங்கிகள் எல்லாம் சேவை என்ற மனப்பான்மையில் இருந்து தற்போது வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாறி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையாக விமிர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.