பாலியல் உறவுக்கு வர மறுத்து, கல்யாண டார்ச்சர் செய்து அடம் பிடித்த கள்ளக் காதலி மீது, ஆத்திமடைந்த கள்ளக் காதலன், ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயதான முத்துராம லட்சுமி என்ற பெண், ஏற்கனவே திருமணமாகி தனது கணவனுடன் வசித்து வந்தார். ஆனால், கணவன் - மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள் எழுந்ததால், கணவனை பிரிந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
அத்துடன், தாயாருடன் வசித்து வரும் முத்துராம லட்சுமி, ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இப்படியாக, தேனி மாவட்டத்தில் முத்துராம லட்சுமி ஜவுளி வியாபாரம் செய்த போது, அங்கு வந்த மற்றொரு ஜவுளி வியாபாரியான 30 வயதான செல்வம் என்ற இளைஞடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் பழக்கமும் ஏற்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், 30 வயதான செல்வத்திற்கு திருமணமாகத நிலையில், இவர்கள் இன்னும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். இதனால், இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து அந்த பகுதியின் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த வியபாரத்தின் போது அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்படியாக, இவர்கள் அடிக்கடி வியாபர விசயமாக வெளியூர் செல்லும் போதெல்லாம், உல்லாசம் அனுபவித்து ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகவே, இவர்கள் இருவரம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, இவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே, கணவன் - மனைவியை போல் தங்கி, அந்த வீட்டில் இருந்தபடியே இருவரும் ஜவுளி வியாபாரத்தை தொடர்ந்து உள்ளனர்.
இப்படியே, இவர்களது கள்ளக் காதல் உல்லாசமாக சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் முத்துராம லட்சுமி, என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று, காதலன் செல்வத்திடம் வற்புறுத்தி இருக்கிறார். இப்படியாக, அடிக்கடி அந்த பெண் கல்யாண டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனபல், கல்யாணம் செய்துகொள்ள செல்வம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதனால், கள்ளக் காதலர்கள் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்து உள்ளது.
இப்படியாக, நேற்று முன் தினம் தனது கள்ளக் காதலியை செல்வம் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால், அவரோ, “எனக்கு தாலி கட்டாமல் நான் உன்னுடன் உல்லாசமாக இருக்க முடியாது” என்று, அந்த பெண் மறுத்து அடம் பிடித்து நின்று உள்ளார்.
இதன் காரணமாக, அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது, கடும் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் செல்வம், ஆசிட்டை எடுத்து கள்ளக் காதலி முத்துராம லட்சுமியின் முகத்தில் ஊற்றி விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்.
இதனால், மிக கடுமையான வலியால் அலறி துடித்த முத்துராம லட்சுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக இருக்கும் கள்ளக் காதலனை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.