மாமியார் மீதிருந்த கள்ளக் காதலால் மகளை திருமணம் செய்திருந்த நிலையில், மாமியாரின் 2 வது கணவனை மருமகன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் ராஜகோபால் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர், தன் மனைவி 39 வயதான சித்ரா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு, 24 வயதில் கவுசல்யா என்ற மகளும், 22 வயதில் சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

இப்படியாக, இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் கணவன் சேகர் உயிரிழந்து உள்ளார். இதனால், சித்ரா தனது இரு மகள்களையும் சிரமப்பட்டு வளர்த்து வந்தார்.

அதே நேரத்தில், சித்ராவுக்கு 13 வயது இருக்கும் போதே, சேகருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது சித்ராவுக்கு 39 வயது மட்டுமே நடக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், தனது 24 வயது மகள்  கவுசல்யாவுக்கு, அவர் முறைப்படி சோனு சர்மா என்பவருடன் திருமணம் செய்து வைத்து, மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளார். அதே போல், தன்னுடைய மகனுக்கும் அவர் திருமணம் செய்து வைத்து உள்ளார்.

இந்த நிலையில், விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள ஓட்டலில் பணியாற்றும் அருகில் உள்ள உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 26 வயதான பாலமுருகனை, சித்ரா 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட மகன் கவுசல்யாவின் மாப்பிள்ளையான மருமகன் சோனு சர்மா, கடும் ஆத்திரமடைந்து உள்ளார்.

இதனையடுத்து, மாமியார் வீட்டிற்குச் சென்று, அவர் சித்ராவுடன் தகராறு செய்து உள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது, இந்த சண்டையைத் தடுக்க வந்த சித்ராவின் 2 வது கணவன் பாலமுருகனை, சோனு சர்மா கத்தியால் குத்தி உள்ளார். பாலமுருகனைக் குத்தும் போது சித்ரா தடுக்க முயன்று உள்ளார். இதில், சித்ராவுக்கும் கையில் வெட்டுக் காயம் பட்டுள்ளது. ஆனால், அதையும் தாண்டி பாலமுருகனை அவர் கத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியாரின் 2 வது கணவனை குத்தி கொன்ற மருமகன், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பாலமுருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதரைனக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரின் 2 வது கணவனை குத்தி கொன்ற மருமகனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்து உள்ளனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “மாமியார் சித்ரா மீது இருந்த ஆசையால் தான், அவரின் மகளை நான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், அவரோ என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரம் தாங்காமல் அவரை குத்தி கொலை செய்துவிட்டேன்” என்று, வாக்கு மூலம் அளித்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.