சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டு, கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். ஜனவரி 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளிவருவதாக இருந்தது. 


இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென  மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு கடந்த 2 நாட்களாகவே காய்ச்சல் , இருமல் இருந்தது என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவக்குழு விரைந்து அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருப்பதால், சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.