தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு, இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளார். 


மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது. அதில் 3.08 கோடி ஆண் வாக்காளர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 வாக்காளர்களும் தமிழகத்தில் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 8,97,694.


அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் மற்றும் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 47 வெள்நாட்டு வாழ் தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.