அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருதானது, அமெரிக்க அதிபரால், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை தனது ஆட்சி காலத்தில் மேம்படுத்தியதற்காவும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, அரசியல் உறவுகளில் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டி இந்த உயரிய விருது வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் சார்பில் , அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து , இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 


 ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் அதனை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். 


” இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த செயல்பட்டது மற்றும்  உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது இதன் மூலம் பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உலக அமைதியை மேம்படுத்தும் திறனை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது” என இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.