கொளத்தூரில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , நிகழ்ச்சியின் போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட, உடனே தனியார் மருத்துவமனையிக்கு முதற்கட்ட பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  


பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு 11.20 மணிக்கு மு.க.ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆகியோருடன் சென்றார். அதன் பின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 12.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.


பரிசோதனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. அதனால் அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தோம், ஈசிஜி பரிசோதனை செய்தோம் எந்த பிரச்னையும் இல்லை, தூக்கமின்மை காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும்  சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புறப்பட சொன்னார்கள்“ என்று தெரிவித்து இருக்கிறார்.