தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நான்காம் சீசன் நிகழ்ச்சியில் நாள்தோறும் எதாவது சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ரியோ கேங் சேர்த்து வைத்துக்கொண்டு மற்றவர்களை டார்கெட் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கிறது.

நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் அனிதா மற்றும் ரியோ கேங் இடையே சண்டை வெடித்தது. இந்த வார ரோபோ டாஸ்கில் யார் சுவாரஸ்யம் குறைவாக இருந்தார்கள் எனகேட்டதற்கு அனிதாவை தான் ரியோ கேங் டார்கெட் செய்தது. ரோபோக்களுக்கு பெயர் வைத்தது அனிதா தான் என ரியோ குற்றம்சாட்டினார்.

இது குறித்து பேசிய அனிதா, இந்த வாரம் முழுக்க கேப்டனா இருந்து எவ்ளோ விஷயம் பண்ணியிருக்கேன். டாஸ்க்கும் பண்ணிட்டு சமையலும் செஞ்சுக்கிட்டு எவ்ளோ செஞ்சுருக்கேன். ரியோ இன்னைக்கு பேசினது எல்லாமே முழுக்க முழுக்க பேக்கேஜ் வச்சுக்கிட்டுதான். காலையில் தனியா எழுந்து சமையல் பண்ணியிருக்கேன். யாரு ஹெல்ப்பா இருந்தாங்க? எனக்கு தேவைதான் சமைச்சுக்கிட்டு டாஸ்கும் விளையாடுனேன்ல எனக்கு தேவைதான். எந்த வேலையும் பார்க்காம எனக்கு விளையாட தெரியாதா ? என்று தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். 

இதேமாதிரி என்னை தூக்கிட்டு குரூப்பா போய் ஃபைனல்ஸ்ல போட் உட்காரணும். அதான உங்க பிளான். என் கேப்டன் என்ன சொன்னாரோ அதை நான் செஞ்சுருக்கேன். தனி ஆளா விளையாடுற எல்லாரையும் தூக்குங்க. சனம்ம தூக்குனீங்க. இப்போ என்னை தூக்குங்க.. என கடுமையாக விளாசிவிட்டார் அனிதா.

இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை வெடித்தது. அதன் பின் அனிதா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஜெயிலில் இருக்கும் அனிதா வெளியில் இருக்கும் ரியோ இருவரும் சத்தமாக கத்தி சண்டை போட்டிருப்பது காட்டப்பட்டு இருந்தது. 

நிஷா செய்ததால் அர்ச்சனா அழுதார்கள். அதனால் கேம் down ஆனது. அது உங்களுக்கு தப்பாக தெரியவில்லை என பேச தொடங்கிய அனிதா அதன் பின் பெயர் வைத்தது பற்றிய பிரச்சனைக்கு வருகிறார். அந்த ஐடியா கொடுத்தது நீ என அம்பை மீண்டும் அனிதா பக்கமே திருப்பிவிடுகிறார் ரியோ.

அப்போ நிஷா அக்கா செய்தால் உங்களுக்கு புடிக்கல, ஆனால் நான் அதே விஷயத்தை செய்தால் சுவாரஸ்யம் இல்லையா என கேடிக்கிறார் அனிதா. பிடிக்கவில்லை என்பதற்கும், boring என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என ரியோ சொன்னலும் அதை அனிதா ஏற்பதாக இல்லை.

இந்நிலையில் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை விளக்குகிறார் அர்ச்சனா. அதை ஏற்காமல் மறுத்து பேசுகிறார் அனிதா. ஜெயிலில் அனிதாவுடன் ரமேஷும் உள்ளார். இதனால் இவர்களின் வாக்குவாதம் ரமேஷுக்கு கடுப்பை தருகிறது. இதனால் இந்த வார எவிக்ஷன் நாளுக்காக காத்திருக்கின்றனர் பிக்பாஸ் விரும்பிகள்.