பிக்பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. புதிய மனிதா டாஸ்க்கில் அனிதாவின் கேமில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது என்று அவரை ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்தனர். நிஷா மற்றும் ரியோ இருவரும் சேர்ந்து அனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரிய பஞ்சாயத்தை கிளப்பினர். அனிதாவின் கேமில் சுவாரஸ்யம் குறைவாக இருந்ததாக அனைவரும் குற்றம் சாட்டியதே இதற்கு முக்கிய காரணம். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஜெயிலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் அனிதா. அங்கிருந்தும் ரியோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பொறுமைக்கும் ஒரு அளவு உள்ளதென்பதை ரியோ நிரூபித்துள்ளார். நான் அப்படி இல்லை என்று சத்தமாக ரியோ கூறியதால் அருகில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் உறைந்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

கேப்டன்சி வைத்து நான் சொல்லவில்லை என்று ரியோ கூற, அதெல்லாம் சேர்த்து தான் சொல்லிருக்கனும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் அனிதா. கடந்த மூன்று சீசன்களை போல இல்லாமல் இந்த வருடம் நடந்துவரும் பிக் பாஸ் 4வது சீசனில் எந்த லவ் ட்ராக்கும் இல்லை. ஆனாலும் அந்த குறையை போக்கும் விதத்தில் பாலாஜி மற்றும் ஷிவானி ஜோடி ரொமான்ஸ் காட்சிகள் பிக் பாஸில் அதிகம் பார்க்க முடிகிறது. 

ஆனால் அது காதல் என அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பது நேற்றைய நாளில் காட்டப்பட்டு இருந்தது. அதில் இந்த வாரம் வழங்கப்பட ரோபோ டாஸ்க் போலவே இருவரும் பேசிக்கொள்கின்றனர். மேலும் ஷிவானி பாலாஜியிடம் சனம் பற்றியும் பேசுகிறார். 

சனம் இருந்தால் உனக்கு பட்டம் கொடுத்துட்டு இருந்திருப்பாங்க, அவங்க இல்லாம நீ ஓவரா ஆடிட்டு இருக்க என ஷிவானி சொல்ல, நீயும் போய்விட்டால் அதுக்கு கூட ஆள் இருக்காதே என பாலாஜி பதில் கூறுகிறார். அதற்கு ஷிவானி அதென்ன.. நான் போவேன்.. நீ இருப்பியா என கூறி சண்டை போட்டார்.