திருடவந்த இடத்தில் சிசிடிவியைப் பார்த்து நொந்துபோன திருடன் தலையில் அடித்துக்கொண்ட ருசிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், சொந்த விசயமாக அவர் குடும்பத்துடன் கடந்த வாரம் வெளியூர் சென்றிருந்தார். 

robbery CCTV footage

வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர் ஒருவர், அவரது வீட்டிற்குத் திருட வந்துள்ளார். அப்போது, 
வீட்டின் கதவைத் திறப்பதற்காக, அருகில் உள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை வெளியே எடுத்தார்.

ஆனால், இது போதாது என்பதால், அங்கு வேறு எதுவும் பொருட்கள் கிடைக்குமா என்று இங்கும், அங்குமாக சென்று தேடியுள்ளார். அப்போது, சிசிடிவி கேமரா மேலே இருப்பதை, அவர் நிமிர்ந்து பார்த்துள்ளார். இதில், அதிர்ச்சியடைந்த அவர் நொந்துக்கொண்டே, தலையில் அடித்துக்கொண்டு, அங்கிருந்து எதையும் திருடாமல் வேகமாகத் தப்பித்து ஓடியுள்ளார்.  

robbery CCTV footage

இதனிடையே, வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், இந்த சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து, புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, திருட வந்தவனைப் பிடிக்கத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.