தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. இத்திரைபடத்தை V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரவீன்.K.L. படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ,

#Maanaadu மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இது ஒரு pகுற்றச் செயல்! திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் 

என தெரிவித்துள்ளார்.