பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் பெண்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

muslims

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் பெண்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சிறைகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு நன்னடத்தை காரணமாகவும் அண்ணா பிறந்தநாளையொட்டியும் பல்வேறு சிறைகளில் உள்ள ஏராளமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பது தங்கள் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு கடந்த காலங்களில் வாழ்நாள் சிறை வாசம் அனுபவித்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. 

அதனைத்தொடர்ந்து கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பது தங்கள் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அப்பொழுது  ஸ்டாலின் அண்ணா என்று பேச தொடங்கிய அபுதாஹிர் தங்கை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது உங்களுடைய ஆட்சி தனியாட்சி. நீங்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அப்படி இருக்கையில் எங்களது சகோதரர்களை ஏன் விடுதலை செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உங்களது காரணம் சரியாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.