கள்ளக் காதல் கொலைகளில் இந்தியாவிலேயே சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது என்று தேசிய குற்றப் பதிவு பணியகம் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்றப் பதிவு பணியகம் சமீபத்திய புள்ளி விவரங்களின் அடிப்படையிலான பட்டியலைப் பகிர்ந்து உள்ளது. இதில், கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும், சென்னையில் கள்ளக் காதல் காரணமாக மொத்தமாக சுமார் 28 கொலைகள் நடந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொலைகள் தொடர்பான புள்ளி விபரம் என்பது, சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 பெரு நகரங்களில் மிக உயர்ந்தது என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

அதே போல், சென்னையில் மிக சாதாரண தகராறு காரணமாக 90 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது மேற்கூறிய புள்ளி விவரங்களில் 2 வது மிக உயர்ந்ததாகும். இப்படியான கொலை வழக்கு குற்றங்களில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதனால், சாதாரண தகராறு காரணமாக பதிவு செய்யப்படும் கொலை வழக்கு குற்றங்களில் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

மேலும், இந்தியாவிலேயே வயதானவர்களைப் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் தமிழ் நாடு தற்போது 2 வது இடத்தில் உள்ளது. 

இது போன்று, கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் நாட்டில் சுமார் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு முன்பாக, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் வயதானவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெரும்பாலான வழக்குகள் இன்னும் முடித்து வைக்கப்படாமல் இருக்கின்றன என்றும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக, ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியவர்களின் விவரங்களைச் சேகரிக்க அனைத்து நகர காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தமிழ் நாட்டில் கடந்த 2109 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் தொடர்பாகவும், அந்த கொலைக்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பான புள்ளி விபரங்களையும் தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, கடந்த 2109 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தகராறு காரணமாக 90 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குடும்ப தகராறு காரணமாக 60 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தனிப்பட்ட பகை காரணமாக, 52 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. சிறிய வகையிலான தகராறு காரணமாக 34 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக, கள்ளக் காதல் தொடர்பாக 28 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 
உள்ளன.

கொலை செய்யக் காரணம்  - 2109 ஆம் ஆண்டு வழக்குகள்
தகராறு                                     - 90
குடும்ப தகராறு                      - 60
தனிப்பட்ட பகை                    - 52
சிறிய தகராறு                         - 34
கள்ளக்காதல்                          - 28

இந்த கொலை வழக்கிற்கு உதாரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 வயதான ஒரு பெண் ஒருவர், தனது கள்ளக் காதலன் உதவியுடன், தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றார். ஆனால், கணவர் அதிக அளவிலான மதுபானம் குடித்ததாலேயே அவர் உயிரிழந்தார் என்று அவர் மனைவி