திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக சட்டதிட்ட விதி : 18, 19-ன்படி கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

அது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.இராசா, எம்.பி., துணைப் பொதுச்செயலாளராகவும் -  தங்க. தமிழ்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன் கழக சட்டதிட்ட விதி:18, 19-ன் படி,  திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக். 1) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"தேனி மாவட்டத்தை கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

தேனி தெற்கு மாவட்டம் கம்பம் ஆண்டிப்பட்டி, தேனி வடக்கு மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியகுளம் (தனி).

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும். மாவட்டப் பொறுப்பாளர் நியமனம் மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் - கம்பம் என்.ராமகிருஷ்ணன்

தேனி வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் புதிய கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக, பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி., துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக, கொள்கைப் பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.யுடன், திமுக சட்டதிட்ட விதி: 18, 19-ன்படி, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்" 

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனி புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், மேடைப் பேச்சாளர் ஆவார். சபாபதி மோகன், மனோன்மணியம் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஆவார்