போபால் மக்களவை தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாகூர் , ‘’காந்தியை சுட்டுக் கொன்ற கோட் சே தேசபக்தர்” என்று அவர் தெரிவித்து இருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


பாஜக தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரக்யா சிங் தாகூர் , மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர்.

கடந்த 12ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், ‘’  பிராமணர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. வைஷ்யர்களும் தங்களை வைஷ்யர்கள் என்று அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. ஆனால் சூத்திரர்கள் தங்களை சாதி பெயரைக் கொண்டு அழைத்தால் அவமதிப்பாக நினைக்கிறார்கள்.


ஜே.பி நாட்டா வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடந்திய மம்தா பானர்ஜியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. மேற்கு வங்கத்தில் இந்து ராஜ்ஜியம் அமையவுள்ளது. இந்துக்கள்  மம்தாவிற்கு  சரியான பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் , பிரக்யா சிங் தாகூர் பேசிய கருத்துகள் அனைத்தும் பெரும் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது.