சின்ன மருமகளுடன் மாமனாருக்கு கள்ளக் காதல் இருந்தது தெரிய வந்த நிலையில், பெரிய மருமகளின் உதவியுடன் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் 55 வயதான ஒருவர் தனது மனைவி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மொத்தம் 4 மகன்கள் உள்ளனர். இதில், முதல் இரு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில், அந்த இரு மகன்களும் தங்களது மனைவியை சொந்த ஊரான பெற்றோருடன் விட்டு விட்டு, அவர்கள் மும்பையில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

அப்போது, பெற்றோருடன் வசித்து வந்த சகோதரர் இருவரின் மனைவிகளும், ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் இணக்கமாக இல்லை என்றும், கூறப்படுகிறது.

அத்துடன், இளைய மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இளைய மருமகளுக்கும், மாமனாருக்கும் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசயத்தைத் தெரிந்துகொண்ட மூத்த மருமகள், தனது மாமியாரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவருடைய மாமனார், தனது கணவரையும், இளைய மருமகளையும், அழைத்துக் கண்டித்து உள்ளார். அந்துடன், அந்த கள்ளக் காதல் உறவைத் துண்டித்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அவர்கள் இருவரும், எப்போதும் போலவே மிகவும் நெருக்கமாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த மாமியார், இளைய மருமகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளார். இதனால், கடும் விரக்தியடைந்த மாமனார், இளைய மருமகளின் வீட்டிற்கே சென்று அவரை அழைத்து வந்ததுடன், மனைவியையும், மூத்த மருமகளையும் சண்டை போட்டு தன் வீட்டை விட்டே வெளியே விரட்டி அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீட்டை விட்டு வெளியேறிய பெரிய மருமகளும், மாமியாரும் எங்கு செல்வது என்று தெரியாமல், வீடு இருந்த தெருவிலே ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அப்போது, தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய இருவரையும் பழி வாங்க அவர்கள் திட்டமிட்டனர். 

அதன் படி, நேற்று இரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாமியாரும், பெரிய மருமகளும், அங்கு இருந்த மாமனாரையும், இளைய மருமகளையும் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதிலிருந்து தப்பிய மருமகள், காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தஞ்சம் அடைந்துள்ளார்.  

அப்போது, வீட்டில் தனியாக மாட்டிக்கொண்ட மாமனாரை மீட்க, சின்ன மருமகள் காவல் துறையினருடன் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். ஆனால், போலீசார் வருவதற்குள், மாமியாரும், மூத்த மருமகளும் சேர்ந்து மாமனாரின் கழுத்தை அறுத்து விட்டு, அங்கிருந்த நீச்சல் குளத்தில் போட்டு விட்டுத் தலைமறைவாகி விட்டனர். 

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் 
சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அரசு மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மேலும், இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர் குறித்து அவரது மகன்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.