“உன் சேலையை பிடிச்சு உருவிவிடுவேன்..” பள்ளியில் தலைமை ஆசிரியை ஆபாசமாக மிரட்டிய மாணவியின் தந்தை!

“உன் சேலையை பிடிச்சு உருவிவிடுவேன்..” பள்ளியில் தலைமை ஆசிரியை ஆபாசமாக மிரட்டிய மாணவியின் தந்தை! - Daily news

மதுபோதையில் பள்ளிக்கு புகுந்து தலைமை ஆசிரியரை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தையை போலீசார் அதிரடியாக கைது செய்யள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூரில் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 

இப்படியான சூழலில் தான், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் என்று பலரும் வருகை தந்து உள்ளனர்.

அப்போது, பள்ளிக்கூடம் தொடங்கிய அடுத்த சிறிது நேரத்தில் அந்த பள்ளியின் முன்புறம் உள்ள ஒரு திடலில் காலை வணக்க வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

அப்போது, அந்த திடல் முன்பு இருந்த மேடையில், தலைமையாசிரியை உள்பட பல ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நின்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், திடீரென பள்ளி வளாகத்துக்குள் கடும் போதையில் வந்த அந்த பள்ளி மாணவியின் தந்தையான 39 வயதான செல்வக்குமார் என்பர், அந்த திடலின் மேடை மீது ஏறி, சக ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். 

அப்போது, பல ஆசிரியர்கள் அவரை சமாதானம் படுத்தப் முயன்ற நிலையில், சிறிது நேரம் இதனை துளியும் பொருட்படுத்தாத அந்த நபர், அங்கு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அப்போது, அந்த போதை ஆசாமியிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஷீலா கரோலின், அந்த நபரை “இங்கிருந்து வெளியே போகும் படி” கூறியிருக்கிறார்.

இதனால், இன்னும் கோபம் அடைந்த அந்த போதை ஆசாமி, அந்த தலைமை ஆசிரியையை தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை திட்டி தீர்த்திருக்கிறார். 

குறிப்பாக, “நீ  பொம்பள தானே, உன் சேலையை அவிழ்த்து விடுவேன்” என்று, அங்குள்ள எல்லோர் முன்பும் அந்த தலைமை ஆசிரியரை அந்த போதை ஆசாமி பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை, அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் தட்டி கேட்ட போது, அந்த ஆசிரியரின் முகத்தில் அந்த போதை ஆசாமி செல்வகுமார் தாக்கி உள்ளார். அதனை தடுக்க வந்த மற்றொரு ஆசிரியரைம் இந்த போதை ஆசாமி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அங்கிருந்த மாணவ - மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த போதை ஆசாமியை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment