நாகர்கோவில் காசி லேப்டாப்பில் 1,900 நிர்வாணப் படங்கள்! பாதிக்கப்பட்டது மொத்தம் 120 பெண்கள்!!

நாகர்கோவில் காசி லேப்டாப்பில் 1,900 நிர்வாணப் படங்கள்! பாதிக்கப்பட்டது மொத்தம் 120 பெண்கள்!! - Daily news

நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் கிட்டதட்ட 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் இருந்து உள்ள நிலையில் காசியிடம் ஒட்டு மொத்தமாக 120 பெண்களின் சிக்கி சீரழிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் காசியையும், அவர் சம்மந்தமான வழக்கையும் தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு பெண்களை மயக்கி, அவர்களை ஏமாற்றி அவர்களது ஆபாசப் படங்களை வைத்து, பல லட்சம் ரூபாய் பணம் பறித்து வந்து, மன்மதன் என்று அறியப்பட்டவர் தான் இந்த காசி.

அதாவது, சென்னையில் பெண் டாக்டர் உள்பட தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசியை கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த வழக்கின் தொடக்கத்தில், காதலன் மன்தமன் காசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தற்போது வரை ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக்கொண்டே இருந்தன.

இந்த வழக்கில் காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. இதனையடுத்து, அவனும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.

இது தொடர்பான வழக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் வசம் சென்ற நிலையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்கு இன்னும் சூடு பிடித்தது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த தகவலின் படி, பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது போன்ற உண்மைகள் தெரிய வந்தது. 

அதன்படி, காசி தான் அணிந்திருக்கும் கை கடிகாரத்தில் உள்ள கேமராவை பயன்படுத்தி, பல பெண்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பேராசிரியை ஒருவரும், காசியின் வலையில் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர், காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்து உள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டு இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஆனால், காசியின் தொடர்பிலிருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல அதிர்ச்சி தகவல்களை அந்த பெண்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை பெரும்பாலும் காரில் வைத்தே காசியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போலீசாரின் விசாரணையில் ஒவ்வொன்றாகத் தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக,  காசியின் ரகசிய லேப்டப்பில் தான் அனைத்து வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அந்த ரகசிய லேப்டாப்பை போலீசார் தேடிய நிலையில், குறிப்பிட்ட அந்த ரகசிய லேப்டாபானது, ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால், மீட்கப்பட்ட அந்த லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு இருந்தன. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், காசியின் தந்தை அந்த லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காசி மீது பதியப்பட்ட 4 பெண்கள் ஏமாற்று வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் அப்போது சேர்த்தனர். இதனால், காசியின் தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே போல், காசி வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் தனிப்படை போலீசார், சம்மந்தப்பட்ட லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் தான், இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசார் தரப்பில், “காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று, விசாரணையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், “காசியின் வீட்டில் இருந்து ஆப்பிள் மொபைல் ஃபோனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்த போது, 1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும்” சிபிசிஐடி கூறியுள்ளது.

மிக முக்கியமாக, கிட்டதட்ட காசியிடம் இதுவரை 120 பெண்கள் பாதிக்கப்பட்டு சீரழிந்து உள்ளதாகவும், அதில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன் வந்துள்ளனர் என்றும், இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது” என்றும், சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனால், “இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது” என்று, கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால், காசியின் வழக்கு பொது மக்கள் மத்தியில் மீண்டும் நினைவுக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment