மாடுகளை ஏற்றி சென்ற இஸ்லாமிய இளைஞர் மீது கொடூர தாக்குதல்! “உத்திரப் பிரதேசத்தில் பயங்கரம்..

மாடுகளை ஏற்றி சென்ற இஸ்லாமிய இளைஞர் மீது கொடூர தாக்குதல்! “உத்திரப் பிரதேசத்தில் பயங்கரம்.. - Daily news

மாடுகளை ஏற்றி சென்ற இஸ்லாமிய இளைஞர் மீது மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக் கறி பிரச்சினை, அங்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. 

அதுவும், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, “மாட்டுக் கறி எடுத்துச் செல்வதாகக் கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் சம்பவமும், வட மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்” குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக 5 மாநில தேர்தலை முன்னிட்டு, இந்த தாக்குதல்கள் சம்பவங்கள் சற்றே குறைந்திருந்தது என்றே கூறப்படுகிறது. 

தற்போது, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் யாவும் முடிவடைந்த நிலையில், இங்கு 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. 

இந்த சூழலில் தான், உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் மாட்டுக்கறி ஏற்றிச் சென்றதாக மீண்டும் அப்பாவி இளைஞர் தாக்கப்பட்டு இருப்பதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து கடந்த 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு “மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி” அதனை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரை கிராம மக்கள் சிலர் கொடூரமாகத் தாக்கி உள்ளதாக” கூறப்படுகிறது. 

“அந்த வாகனத்தில் “மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதை” கண்ட கிராம மக்கள் அந்த வாகனத்தை நிறுத்தியதுடன், மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி 30 வயதான ஒரு இஸ்லாமிய இளைஞரை அந்த கும்பல் சிறைபிடித்து வைத்திருந்த நிலையில், அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இப்படியாக, தாக்குதலுக்கு ஆளான அந்த நபர் குறித்த ஒரு வீடியோ ஒன்றும் தற்போது இணையத்திலும் வேகமாக வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், “அந்த இஸ்லாமிய இளைஞரின் சட்டை கிழிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அவரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை கண்மூடித் தனமாக தாக்குவதும்” தெளிவாக தெரிகிறது. 

இப்படி, அந்த கும்பலிடம் அடி வாங்கும் அந்த இஸ்லாமிய இளைஞர், “என்னை விட்டுவிடுங்கள்” என்று, அந்த முரட்டு கும்பலிடம் கெஞ்சுகிறார். 

ஆனால், இதனையெல்லாம் துளியும் பொருட் படுத்தாத அந்த கும்பல், அந்த அப்பாவி இளைஞரை பெல்ட்டால் கடுமையாக தாக்குகிறது. இப்படியாக, அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ வெளியாகி, உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இது குறித்து, “அடையாளம் தெரியாத பல நபர்கள் மீது” உத்தரப் பிரதேச போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக தற்போது விராசாணையும் நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பான போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், “இந்த வாகனம் இறந்த விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் ஒரு கிராமத்தின் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதி என்பதையும்” போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில், இந்த தாக்குதலில் அந்த இஸ்லாமிய இளைஞருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த இளைஞர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு, அந்த மாநிலத்தின் சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment