புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்!

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்! - Daily news

காவல் நிலையத்திற்கு “புகார்” அளிக்க வந்த இளம் பெண்ணை, அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாட்டில் என்பவர் அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்திருக்கிறார்.

அப்போது, அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பட்டீல் பணியில் இருக்கும் போது, இளம் பெண் ஒருவர், ஒரு வழக்கு சம்பந்தமாக புகார் அளிக்க வந்திருக்கிறார்.

அப்போது, அந்த இளம் பெண்ணிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி, தினமும் இரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு போன் செய்து, “பாலியல் உறவுக்கு வருமாறு” வெளிப்படையாகவே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரே இப்படி செய்கிறாரே?” என்று, நொந்துக்கொண்ட நிலையில், அந்த பெண்ணால் வேறு எதுவும் செய்ய முடியாமல் தவித்து உள்ளார்.

இதனால், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் “செக்ஸ் டார்ச்சர்” நாளுக்கு நாள் தொடர்நது அதிகரித்த வண்ணம் இருந்து உள்ளது. 

எனினும், அந்த பெண், போலீஸ் இன்ஸ்பெக்டரின் டாச்சருக்கு சம்ம்மதிக்காமல் இருந்து உள்ளார். என்றாலும், ஒரு கட்டத்தில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த இளம் பெண்ணுக்கு பல முறை காதல் மற்றும் செக்ஸ் சார்ந்த மெசேஜ் அனுப்பியும், இரவில் பல முறை தொடர்ந்து போன் செய்தும், அவர் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த பெண் இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாட்டீல், அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கே அதிரடியாக சென்று, அந்த பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “யாரிடம் என்ன புகார் சொல்வது” என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த இன்ஸ்பெக்டர், தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு பல முறை சென்று, அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

என்றாலும், இந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பயந்து அந்த பெண் பயந்து இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த இன்ஸ்பெக்டர் பாட்டீல், பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

இதனையடுத்து, ​​அந்தப் பெண் மண்டல காவல் துறையின் உயர் அதிகாரியை அணுகி, அந்த இன்ஸ்பெக்டர் மீது அதிரடியாக பாலியல் புகார் அளித்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாட்டீல் மீது, வழக்கு பதியப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment