“மனித மிருகங்கள் வாழும் சமூகமா இது?” 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 80 பேர்!

“மனித மிருகங்கள் வாழும் சமூகமா இது?” 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 80 பேர்! - Daily news

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 80 பேரில், 74 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் 13 வயது மகள், அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்தச் சிறுமியின் தாயாரும், சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தாயார் அங்கேயே பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்போது, அந்த அரசு மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக இருந்த சொர்ணகுமாரி என்ற பெண் பணியாளர், அந்த சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாக அந்த சிறுமியின் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனை நம்பிய அந்த சிறுமியின் தந்தை, “தனது மகளை சுவர்ணகுமாரியிடம் ஓப்படைத்திருக்கிறார்.

ஆனால், அந்த சிறுமியை அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி, அங்குள்ள விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, அந்த பெண் பாலியல் தொழிலில் உட்படுத்தி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியால், அந்த பெண்ணை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை. இதனால், பலவந்தமாக அந்த சிறுமி பாலியல் தொழிலில் செய்தே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் உடலானது நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து உள்ளது. 

அப்படியான சூழ்நிலையில் தான், அந்த பாலியல் அரங்க கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி கூறி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை, உடனடியாக இது குறித்து குண்டூர் காவல் நிலையத்தில் புகார் கூறி உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சொர்ணகுமாரி உட்பட அந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, அவர்கள் அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பல்வேறு தரப்பினரும் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

எனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சிறுமியை கடந்த 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக தான், அந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து, அடுத்தடுத்து சிறையில் அடைத்தனர். 

மேலும், 13 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த அந்த விபச்சார கும்பல் தொடர்பாக மேலும் 10 பேரை குண்டூர் போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்தனர்.

குறிப்பாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த 13 வயது சிறுமி, “தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரி உட்பட தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மொத்தம் 80 பேரை அடையாளம் கூறியிருக்கிறார். 

அதன் படி, இந்த வழக்கில் தற்போது வரை மொத்தம் 74 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர். 

அதே நேரத்தில், தலைமறைவாக இருக்கும் மேலும் 6 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, சிறுமியை நாசம் செய்த 80 பேரில், மொத்தம் 35 பேர் விபச்சார அமைப்பாளர்கள் என்பது தெரிய வந்தது.

மிக முக்கியமாக, இந்த 13 வயது சிறுமியின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல பாலியல் கும்பல்கள் இந்த சிறுமியை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, பல மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment