சிகிச்சைக்கு வந்த இளம் பெண்.. மந்திரம் போட்டு தந்திரமாக பாலியல் பலாத்காரம் செய்த மாந்திரீகன்!

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்.. மந்திரம் போட்டு தந்திரமாக பாலியல் பலாத்காரம் செய்த மாந்திரீகன்! - Daily news

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை, “மந்திரம் போட்டு குணப்படுத்துவதாக” கூறிய மந்திரீகன் ஒருவன், தந்திரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லியில் உள்ள மங்கோல்புரியைச் சேர்ந்த யாமின் என்ற 45 வயதான நபர், அந்த பகுதியில் மாந்திரீகம் செய்து பலருக்கு சிகிச்சைகள் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த பகுதி மக்கள் பலருக்கும் அவர் மாந்திரீகம் செய்து வந்திருக்கிறார். இதனால், அவரிடம் வரும் பொது மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அதுவும், அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், இந்த மாந்திரீகரிடம் வந்து தான், சிகிச்சை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், 45 வயதான மங்கோல்புரியைச் சேர்ந்த யாமின் என்ற மாந்திரீகனிடம், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அன்று, அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், தனது சகோதரியுடன் “உடல் நிலை சரியில்லை” என்று கூறி, அங்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கிய அந்த மாந்திரீகன், அந்த பெண்ணைப் பார்த்து சற்று சபலப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாந்திரீகன் யாமீன், அந்த இளம் பெண்ணுடன் வந்த அவரது சகோதரியை வெளியே காத்திருக்கச் சொல்லி இருக்கிறார்.

அதன்படி, அந்த இளம் பெண்ணும் வெளியே சென்று காத்திருந்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்திருக்கிறார். அதனை சாப்பிட்ட அந்த இளம் பெண்ணும், அங்கேயே மயங்கிவிட, அந்த இளம் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, மயக்கம் தெளிந்த நிலையில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அந்த பெண், அப்படியே பயந்து போய் எதுவும் சொல்லாமல் தனது சகோதரியுடன் வீடு திரும்பி உள்ளார்.

அதே நேரத்தில், இது தொடர்பாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான் அந்த இளம் பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தான், தனக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது தயாரிடம் இது பற்றி கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார், தனது மகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளார்.

இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாந்திரீகன் யாமீனை கைது செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகி உள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அதிரடியாக தேடி வந்த நிலையில், யாமீனின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். 
அப்போது, வீட்டிற்குள் பதுங்கி இருந்த அவரை நேற்றைய தினம் அதிரடியாக போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment