வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த 87 வயது பாட்டியை, 30 வயது இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியில் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர், தனது மகளுடன் வசித்து வந்தார். 

அத்துடன், தனது வயது மூப்பு காரணமாக வெளியில் நடமாட முடியாமல் அந்த 87 வயதுடைய மூதாட்டி, தனது படுக்கை அறையில் எப்போதும் படுத்த படுக்கையாகவே இருந்து வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில், அந்த மூதாட்டி வீடு அமைந்து உள்ள திலக் நகர் பகுதியில், சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞர், துப்புரவுத் தொழில் செய்து வருகிறார்.

அத்துடன், அந்த மூதாட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் நேற்று முன் தினம் அந்த இளைஞன் துப்புரவுப் பணிகளை செய்து வந்திருக்கிறார்.

அப்போது, ஞாயிற்றுக் கிழமை மதியம் நேரம் என்பதால், அந்த வீட்டில் இருந்த அந்த மூதாட்டியின் மகள் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் மூதாட்டி மட்டும் படுத்த படுக்கயைாக இருந்து உள்ளார்.

அப்போது, அந்த வீட்டிறகுள் மதியம் 12.15 மணிக்கு மேல் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த சரவணன், வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அந்த மூதாட்டியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அப்போது, அந்த மூதாட்டியால் தனது சக்திக்கு மீறி பலமாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியவில்லை. எனினும், இந்த பாலியல் வன்கொடுமையால் அவர் உடல் நிலை பலமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, அந்த மூதாட்டியின் மூக்கில் இருந்து ரத்தம் வளிந்து உள்ளது.

அந்த நேரம் பார்த்து சரியாக பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்றிருந்த மூதாட்டியின் மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது தாயாரின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கவனித்த அந்த பெண், பதறிப்போய் உள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக டாக்டரிடம் பேச தனது செல்போனை அந்த பெண் தேடியிருக்கிறார். ஆனால், வீட்டிலிருந்த செல்போன் காணாமல் போனதும் அப்போது தான் தெரிய வந்திருக்கிறது. 

இதனையடுத்து, அந்த பெண் ஓடிச் சென்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசி போலீசுக்கும் தகவல் கொடுத்து உள்ளார்.

அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் “யாரோ தெரியாத நபர் ஒருவர், வீட்டிற்குள் சென்றதை கவனித்ததாக” அங்குள்ளவர்கள் கூறியிரக்கிறார்கள்.

அதே நேரத்தில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், “அந்த வீட்டிற்குள் சென்றது துப்புரவுத் தொழில் செய்யும் இளைஞர்” என்பது, தெரிய வந்தது. 

அத்துடன், அவர் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அங்கிருந்த செல்போனையும் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. 

அதே நேரத்தில், பாட்டியை பலாத்காரம் செய்த அந்த சரவணன், தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்த அடுத்த 16 மணி நேரத்தில் தலைமறைவாக அந்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.