தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொது மக்களும்,பிரபலங்களும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.பல நட்சத்திரங்களும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தனது வாக்கினை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் செலுத்தினார்.விஜய் வருவது தெரிந்து பல ரசிகர்களும்,பத்திரிகையாளர்களும் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர்.

விஜய் உள்ளே செல்லும்பொழுதே ஒரு புகைப்பட கலைஞர் சற்று தடுமாற அவ்ருக்கு கை கொடுத்து மறுபுறம் செல்ல உதவினார்.இதனை தொடர்ந்து உடனே வாக்களித்து விட்டு திரும்ப வேண்டும் என உள்ளே சென்ற விஜய்க்கு போட்டோ கலைஞர்கள் பலரும் சூழ்ந்துகொள்ள சிறிது நேரம் தாமதமானது.

விஜய் உள்ளே செல்லும் வரை அவரை தொடர்ந்து பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் உள்ளே வர அங்கு லேசான தள்ளுமுள்ளு நடந்தது அப்போது அங்கிருந்த சில பொதுமக்களிடம் விஜய் வணக்கத்துடன் சாரி என்றும் தெரிவித்துக்கொண்டார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.