அண்ணன் முறை இளைஞனுடன் காதல் என்ற பெயரில் உல்லாசமாக இருந்து வந்த மகளை தாய் கண்டித்ததால், பெற்ற தாயை மகளே திட்டம் போட்டு கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள துமகூரு கொரடகரேவின் சஜ்ஜன்ராவ் என்னும் தெரிவில் கணவன் இல்லாத நிலையில், 45 வயதான சாவித்ரம்மா என்ற பெண், தனது 20 வயதான மகள் சைலஜா உடன் தனியாக வசித்து வந்தார். 

இப்படியாக, இருவரும் ஆண் துணை இல்லாமல் தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டில் இருந்து வந்த 20 வயதான மகள் சைலஜா, தனது  பெரியப்பா மகனான அண்ணன் முறை கொண்ட 25 வயதான புனித் என்ற என்பவருடன் காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பகல் நேரத்தில் தாயார் வேலைக்கு சென்ற நிலையில், இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மகளின் இந்த உல்லாச காதல் வாழ்க்கை, அவரது தாயாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதுவும், “பெரியப்பா மகனான அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞனோடு காதல் வேண்டாம்” என்று, அந்த தாயார், தனது மகளை கண்டித்திருக்கிறார்.

அத்துடன், “இந்த முறையற்ற காதல் உறவினை கை விட்டு விடுமாறு” அந்த பெண், தனது மகளுக்கு அறிவுரை கூறி உள்ளார். 

அதன் படி, அவர்கள் இருவரும் அடுத்த சில நாட்கள் விலகியிருப்பது போல் நடித்து வந்திருக்கிறார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்கள் இருவரும் மீண்டும் பழையபடியே தங்களது உல்லாச காதல் வாழ்க்கையை மீண்டும் அவர்கள் வாழத் தொடங்கி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார், தனது மகளை மீண்டும் கடுமையாக கண்டித்து இருக்கிறார். 

இதன் காரணமாக, கடும் ஆத்திரம் அடைந்த அந்த 20 வயதான இளம் பெண், “தங்களின் உல்லாச காதல் வாழ்க்கைக்கு தடையாக இருந்து வந்த பெற்ற தாயே கொலை செய்ய” அவரது மகள் சைலஜா திட்டமிட்டிருக்கிறார்.

இப்படியாக, திட்டப்படி கடந்த  ஜனவரி 30 ஆம் தேதி, அந்த பெண்ணின் தாயார் தூங்கும் போது, அவரின் மகளும், அந்த பெண்ணின் காதலன் புனித்தும் சேர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து உள்ளனர்.

அதன் பிற, உயிரிழந்த தயாரின் உடலை வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு, “எனது தாயார், தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக” ஊரார் முன்பு நாடகம் ஆடி வந்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையின் போது, போலீசாருக்கு, “சைலஜா மற்றும் புனித்தின் நடவடிக்கையில் சற்று சந்தேகம்” வந்துள்ளது.

இதனால், அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்ததில், அந்த தாயை மகளே புனித்துடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.