தமிழ் பேசாத போதும் பொன்னியின் செல்வனில் வானதியாக மணிரத்னம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சோபிதா துலிபலாவின் விளக்கம் இதோ!

பொன்னியின் செல்வனின் மணிரத்னம் தேர்ந்தெடுத்த காரணம் குறித்து சோபிதா,sobhita dhulipala about why mani ratnam chose her in ponniyin selvan | Galatta

இதுவரை தமிழ் திரை உலகம் கண்டிராத பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ்நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்றுப் புனைவு நாவலை தழுவி உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க எத்தனையோ முன்னணி ஜாம்பவான்கள் முயற்சி செய்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் அந்த கனவு படைப்பை நிஜமாக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் மணிரத்னம், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் திரைக்கதை அமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரானது.

முன்னதாக முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் ஆல் டைம் ரெகார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மீது ரசிகர்களுக்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகை சோபிதா துலிபலா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், மணிரத்னம் சார் எதன் அடிப்படையில் நீங்கள் தான் இந்த வானதி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பீர்கள் என முடிவு செய்தார். ஏனென்றால் ஏற்கனவே ஏன் தமிழ் பேசும் ஒரு நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்ற ஒரு விமர்சனமும் இருக்கிறது. ஆனால் இருந்தும் மணிரத்தினம் அவர்கள் உங்களை தான் தேர்ந்தெடுத்துள்ளார் இது சரியாக இருக்கும் என, அந்த விமர்சனங்களை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? இது எப்படி நடந்தது? என கேட்டபோது, 

“நான் ஓரிரு இடங்களில் கேள்விப்பட்டேன். வானதி கதாபாத்திரத்திற்கு ஒரு குறிப்பிட்ட உடல் வாகு இருப்பவரை நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டேன். பொன்னியின் செல்வனில் அனைத்து நடிகர்களுமே தென்னிந்தியாவை சார்ந்தவர்கள் தான் என நினைக்கிறேன். யார் எல்லைகளை உண்மையில் நிர்ணயிக்கிறார்கள். அந்த சாம்ராஜ்யத்தின் போது எல்லைகள் எங்கே இருந்தன. எந்த மாநிலத்திற்கு கீழே எந்த மாநிலம் இருந்தது. நமக்கு தெரியாது. ஆனால் இதில் அதிகமாக தென்னிந்தியர்கள் நடித்தது நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன். விமர்சனங்கள் குறித்து பார்க்கும்போது நானும் அது பற்றி யோசிக்கிறேன். அவருடைய (மணிரத்னம்) காரணங்கள் என்ன? ஏனென்றால் மணி சார் ஒரு மாஸ்டர் மேலும் மிகவும் புத்திசாலியான மனிதர் எனவே ஒருவரை அவர் தேர்ந்தெடுக்கும் போது அதில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கும். ஒன்று மட்டும் எனக்கு தெரியும் நான் எல்லாமே எனது எண்ணத்தில் இருந்து பேசக்கூடிய ஒரு நபர் என்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். என் இதயத்தில் என்ன இருந்தாலும் நான் அதை வெளிப்படுத்தி விடுவேன். மேலும் பல பேர் நினைக்கிறார்கள் அப்பாவித்தனமாக இருப்பது மிகவும் வெட்கப்படுவது, குழந்தையாக இருப்பது என ஆனால் அது மட்டுமே அப்பாவித்தனம் கிடையாது ஒரு சிலர் முழுவதுமாக உண்மையை மட்டுமே பேசுவார்கள் குழந்தைகளை போல இது மாதிரியான என்னுடைய குணாதிசயங்கள் வானதி கதாபாத்திரத்தோடு ஒத்துப் போகிறது என மணிரத்னம் சார் நினைத்திருக்கலாம்" என பதில் அளித்துள்ளார். நடிகை சோபிதாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே

'பொன்னியின் செல்வன்-2 2 தங்கலான்’- ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறிய சீயான் விக்ரம்… வைரலாகும் அட்டகாசமான புது GLIMPSE இதோ!
சினிமா

'பொன்னியின் செல்வன்-2 2 தங்கலான்’- ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறிய சீயான் விக்ரம்… வைரலாகும் அட்டகாசமான புது GLIMPSE இதோ!

சினிமா

"FLIGHT-ல பின்னாடி கை வெச்சான்.. சப் சப்னு 4 அடி"!- மோசமான அனுபவத்தில் அடைந்த அதீத கோபம்... திவ்யா கணேஷின் அதிரடி பேட்டி! வீடியோ இதோ