"FLIGHT-ல பின்னாடி கை வெச்சான்.. சப் சப்னு 4 அடி"!- மோசமான அனுபவத்தில் அடைந்த அதீத கோபம்... திவ்யா கணேஷின் அதிரடி பேட்டி! வீடியோ இதோ

அதிக கோபம் அடைந்த சம்பவம் குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்,Serial actress about her bad experience in flight | Galatta

சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான கேளடி கண்மணி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா கணேஷ். இதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி ஆகிய சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் விஜய் தொலைக்காட்சியின் MOST FAVORITE சீரியலாக ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார். மேலும் விஜய் டிவியின் செல்லமா சீரியலிலும் வில்லியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற திவ்யா கணேஷ் FANS MEET நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திவ்யா கணேஷ் ரசிகர்களோடு கலந்துரையாடினார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளித்தார். அந்த வகையில், “இதுவரை எந்த விஷயத்திற்கு நீங்கள் மிகவும் கோபமடைந்து இருக்கிறீர்கள்?” எனக் கேட்ட போது,

“விமானத்தில் ஒரு விஷயம் நடந்தது... விமானத்தில் போகும் போது ஒரு தவறான விஷயம்.. எனக்கு பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர்... நான் நினைத்தேன் இப்ப யாராவது நினைப்போமா விமானத்தில் போகும்போது யாராவது பின்னால் கை வைப்பார்கள் என்று, நினைப்போமா? நானும் அதைப் பற்றி நினைக்கவில்லை. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அது ஒரு பெரிய விமானம் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. நான் பின்னால் கடைசியில் உட்கார்ந்து இருந்தபோது இது மாதிரி ஒரு விஷயம் நடந்தது. முதல் இரண்டு மூன்று தடவை எனக்கு தெரியவே இல்லை. நான் எழுந்திருக்கிறேன். எனக்கு பின்னால் அவர் மட்டும்தான் இருக்கிறார். அவர் மிகவும் உயரமானவர். முதல் முறை நான் திரும்பி பார்த்தேன். நான் நினைத்தேன் இருக்கையில் ஏதாவது பூச்சியாக இருக்குமோ என்று யாருமே இப்படி யோசிக்க மாட்டார்கள் அல்லவா? என்ன தைரியம் இருக்க வேண்டும்.. யோசிக்க முடியாதல்லவா அந்த மாதிரி இருந்தது. மீண்டும் திரும்பி பார்த்தேன் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லை. நான் ஒவ்வொரு முறை எழுந்திருக்கும் போதும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார். நடிப்பது போலவும் தெரியவில்லை. மேலும் என்னுடைய எண்ணமும் அங்கு செல்லவில்லை... அப்போது நான் தூங்குவது போல் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். ஏனென்றால் ஒரே இடத்தில் பூச்சி எப்படி வந்து கொண்டே இருக்கும். எனக்கு அவர் மீதும் சந்தேகம் வரவில்லை. அது கடைசி விமானம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வருவதற்கு... படிப்பு முடித்து வந்த போது... அப்போது தான் தெரிந்தது அது அவருடைய கை என்று... அப்போது எப்படி கோபம் வந்தது என்றால், அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை விமானத்தில் போகும்போது என்ன ஒரு தைரியம் இருக்கும் அப்போது அந்த கையைப் பிடித்து நன்றாக இருக்கையோடு சேர்த்து வைத்து சப் சப்னு 4 அடி…”

என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை திவ்யா லட்சுமியின் அந்த முழு பேட்டி இதோ…
 

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மற்றொரு மாஸ் ஹீரோவின் படம்! அதிரடியான அறிவிப்பு இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மற்றொரு மாஸ் ஹீரோவின் படம்! அதிரடியான அறிவிப்பு இதோ

பக்கா மாஸ் காட்டும் சிலம்பரசன்TRன் பத்து தல பட புது சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

பக்கா மாஸ் காட்டும் சிலம்பரசன்TRன் பத்து தல பட புது சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!