தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.தனது மயக்கும் குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பாடல் பாடுவது மட்டுமின்றி மியூசிக் கம்போஸிங்.மாடலிங் உள்ளிட்டவற்றிலும் அசத்துவார் ஸ்வாகதா.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்து விடும்,விரைவில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாகதா.இவரது புகைப்படங்கள் லைக்குகளை அள்ள இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன.அதில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம் காயல் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இன்ட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்வாகதா.அடுத்து வெளிவர உள்ள சில படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஸ்வாகதா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படி தனக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

கடந்த மார்ச் 4ஆம் தேதி அக்ஷய் குமார் என்பவருடன் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்று ஸ்வாகாதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளார்.இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.