அன்னபூரணி அரசு அம்மாவின் “அம்மா எனர்ஜி தர்ஷன் என்னும் புதிய திட்டத்திற்கு 700 கட்டணம்” வசூக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதங்களுக்கு முன்பு புதிதாக சாமியார் அவதாரம் எடுத்து, எடுத்த எடுப்பிலேயே தமிழகம் முழுவதும் பெரும் பிரபலமானார் அன்னப்பூரணி அரசு அம்மா. 

அதாவது, ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு, அன்னபூரணி என்ற பெண், பொது மக்களுக்கு அருள் வாககு கூறி வருவதாக, வித விதமான புதிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது, தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்குள் பெண் சாமியார் அன்னபூரணியை பற்றிய செய்திகளும், வதந்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைக்கட்ட தொடங்கின.

இதன் காரணமாக, கடந்த டிசம்பவர் கடைசி மற்றும் ஜனவரி மாதங்களில் சமூக வலைத்தள பக்கங்களில் பெண் சாமியார் அன்னபூரணி, பேசும் பொருளாகவே மாறி இருந்தார். இதனால், இவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகிக்கொண்டு இருந்தன.

இப்படியாக, பெரும் ட்ரெண்ட் ஆகிப்போன பெண் சாமியார் அன்னபூரணி அம்மாக்கு மொத்தம் 3 கணவர்கள் இருப்பதாகவும், ஆனால், அவர் தற்போது 4 வதாக ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அப்போது பெரும் சர்ச்சை எழுந்தது.

பின்னர், “தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து வரும் போலியான பெண் சாமியார் அன்னபூரணியை  கைது செய்ய கோரி” தமிழ்நாடு இந்து சேவா சங்கம், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அப்போது புகார் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தான், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார், வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதுவும், பெரிய அளவில் பேசும் பொருளமாக மாறியது.

இதனையடுத்து, அவர் பற்றி பேசுவது சற்று குறைந்த நிலையில், சர்ச்சைகளும் சற்று குறைந்திருந்தன.

இந்த நிலையில் தான், ஏற்கனவே ஜனவரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு பின் வாங்கிய பெண் சாமியார் அன்னப்பூரணி, தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த முன் வந்திருக்கிறார்.

அந்த வகையில், வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று மிகப் பெரிய அளவில் அருள் வாக்கு நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்கிற தவலும் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, “அம்மா எனர்ஜி தர்ஷன்” என்கிற பெயரில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், “இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் 700 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள தனியாக இணையதளமும் இயங்கி வருவதாகவும்” கூறப்படுகிறது.

குறிப்பாக, “சென்னையில் உள்ள சுதானந்த ஆசிரமத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரைக்கும் இந்த அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “ஏப்ரல் 1 ஆம் தேதியோடு இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு  நிறுத்தப்படுகிறது” என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக முக்கியமாக, “ஒரு முறை செலுத்தப்பட்ட கட்டணத்தை, எக்காரணத்தை கொண்டும் திரும்பத் தரப்பட மாட்டாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும், அம்மா எனர்ஜி தர்ஷன் குழு அறிவித்திருப்பதாகவும்” செய்திகள் வெளியாகி உள்ளன.