இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக மளையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா தமிழில் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கனெக்ட் படத்திலும் நடித்து வருகிறார். 

முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான, ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக தயாராகிறது கனெக்ட் திரைப்படம். மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் பட டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வருகிற கோடை வெளியீடாக ஏப்ரல் மாதம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னையில் பிரசித்திபெற்ற காளிகாம்பாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…