தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் அடுத்த கட்டத்தில் அஜித் - விஜய் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களாகவும் தமிழ் சினிமாவின் அடுத்த பெரும் ஆளுமைகளாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் இருவரின் ரசிகர்களுக்கும் இந்த வருட பொங்கல் வேற லெவல் ட்ரீட்டாக அமையவுள்ளது.

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும், மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ஒரே தினத்தில் ரிலீஸாகின்றன.

வீரம் - ஜில்லா திரைப்படங்களின் ரிலீசுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித் - விஜய் படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆவதால் இந்த பொங்கலை ரசிகர்கள் உற்சாகத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே வாரிசு படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான ஷோபி மாஸ்டர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் நீங்கள் தளபதி விஜய் உடன் நிறைய பணியாற்றி இருக்கிறீர்கள்… அதேபோல் அஜித் குமாருடனும் பணியாற்றி இருக்கிறீர்கள்.. அப்படி இருக்கும்போது வாரிசு - துணிவு படங்களில் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகும் போது, அந்த CLASH எப்படி இருக்கபோகிறது? எனக் கேட்டபோது,

“நீங்கள் ஏன் CLASH என நினைக்கிறீர்கள் இரண்டு பேரும் இணைந்த கைகள் என நினைக்கலாமே! இது CLASH கிடையாது. தற்போது நான் உங்களை கேட்கிறேன்.. நீங்கள் எந்த திரைப்படத்தை முதலில் பார்ப்பீர்கள் நீங்கள் யாருடைய ரசிகராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் சொல்லுங்கள் முதலில் வாரிசு பார்க்கிறீர்கள்.. வாரிசு பார்த்துவிட்டு துணிவு படமும் பார்க்கதானே போகிறீர்கள். இது ஒரு கட்டத்திற்கு மேல் போகக்கூடாது என்று நினைக்கிறேன். மரியாதை குறைவாக இல்லாமல் எல்லாமே ஒரு பாசிட்டிவாக இருந்தால் பிரச்சனையே இல்லை, இந்தப் படம் நன்றாக இருக்கிறது அந்த படம் நன்றாக இருக்கிறது, இது எல்லா சமயங்களிலும் இருந்திருக்கிறது. நாம் நமது படத்தை ரசிக்கிறோம் அவர்கள் அவர்களது படத்தை ரசிக்கிறார்கள் பார்த்து முடித்த பிறகு இருவரும் மாறி மாரி இரண்டு படங்களையும் பார்த்துக்கொண்டால் சந்தோஷம். இரண்டு படமும் நன்றாக ஓடும் என நான் நம்புகிறேன்…” என ஷோபி மாஸ்டர் பதிலளித்துள்ளார். ஷோபி மாஸ்டரின் அந்த முழு பேட்டி இதோ…