திடீரென கைவிடப்பட்ட சீரியல்...கடுப்பான முன்னணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | February 09, 2022 11:28 AM IST
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.இந்த தொடரை அடுத்து தமிழில் மீண்டும் ரன் என்ற தொடரில் நடித்திருந்தார் சரண்யா,இந்த தொடர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று வந்த ஆயுத எழுத்து தொடரில் ஹீரோயினாக இடையில் இணைந்தார் சரண்யா.
இந்த தொடரில் இவர் இணைந்த பின் நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனந்த் செல்வன்,மௌனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தனர்.250 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.சீரியல்களை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் சரண்யா.சில நாட்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கிய வைதேகி காத்திருந்தாள் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
சில எதிர்பாராத காரணங்களால் 50 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் சீரியல் நிறுத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதுகுறித்து பலரும் பல கருத்துகள் தெரிவித்து வருவதாகவும் , உண்மையை அறிந்து பேசுங்கள் உழைப்பு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வருத்தமாக தெரிவித்துள்ளார்.என்ன நடந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டு வருவேன் என்றும் ரசிகர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சரண்யா.