கேரளாவில் மலை இடுக்கில் கடந்த 2 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை, மீட்புப் படையினர் தற்போது பத்திரமாக மீட்டு உள்ளனர்.

கேரளா பாலக்காட்டை சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர், தனது 3 நண்பர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மலம்புழையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்று உள்ளனர்.

அங்கு, மதிய நேரத்தில் அவர்கள் மலையில் இருந்து இறங்கி உள்ளனர். அப்போது, அவர்களில் பாபு மட்டும் அந்த மலையின் பள்ளமான ஒரு இடத்தில் இருந்த பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்து உள்ளார். ஆனால், அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் பாபுவை மீட்க முயன்று உள்ளனர். ஆனால், நண்பர்களின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது.

இதனால், பதறிப்போன அந்த நண்பர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, மலம்புழை வனத்துறையினரிருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டன. 

இதனையடுத்து, நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த இளைஞர் பாபு சிக்கித் தவித்த இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்கும் பணி இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போது, அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு கேட்டது. 

அதன்படி, தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், இன்று காலையில் அதிரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முதற்கட்டமாக மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி தவித்த பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் முதலில் உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். 

அதனைத் தொடர்ந்தே, அந்த இளைஞரை கீழே கொண்டும் வரும் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, “உணவு, தண்னீர் இன்றி தவித்து வந்த இளைஞர் பாபுவை சுமார் 43 மணி நேரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் அந்த இளைஞரை யிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து, தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த இளைஞன் முத்தமிட்டு, தனது அன்பை வெளிப்படுத்தினார். இச்சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.