ஆசையாசையாய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ஜீவா தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் ராம், இயக்குனர் சசி இயக்கத்தில் டிஷ்யூம், இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கத்தில் ஈ, இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக கவனிக்க வைத்தார். மேலும் சிவாமனசுலசக்தி சிங்கம்புலி கோத்ரம் நண்பன் என்றென்றும் புன்னகை கவலை வேண்டாம் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக பாலிவுட்டில் தயாராகி இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியான 83 திரைப்டத்தில் நடிகர் ஜீவா முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து ஜீவாவின் நடிப்பில் மேதாவி & வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர்.சியுடன் இணைந்து புதிய படத்திலும் நடித்து வருகிறார். 

இதனிடையே இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் திரைப்படம் கோல்மால். ஜாகுவார் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் கோல்மால் படத்தில் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கதாநாயகிகளாக தான்யா போப் மற்றும் பாயல் ராஜ்புட் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். கோல்மால் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மொரீசியசில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கோல்மால் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகை மாளவிகா இணைந்துள்ளார். தமிழில் அஜித்தின் உன்னைத்தேடி & ஆனந்த பூங்காற்றே. இயக்குனர் சேரனின் வெற்றிக்கொடி கட்டு, திருட்டுப் பயலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜீவாவின் கோல்மால் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கோல்மால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து மாளவிகா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மாளவிகா. அந்த புகைப்படம் இதோ…