இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமையாக, மிகச் சிறந்த இயக்குனராக திகழும் இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்பயணத்தில் சாதனை மணிமகுடமாக அவரது கனவு திரைப்படமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் வசூல் சாதனை படைத்து வருகிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் அற்புத நாவலான பொன்னியின் செல்வனை தழுவி இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்கள் எழுத சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அட்டகாசமான படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் படக்குழுவினரை புகழ்ந்து இயக்குனர் ஷங்கர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு இதோ…
 

#PS1 Captivates.A quality Tamil historical film after years.#ManiRatnam Sir’s mastery in filmma’King’ proven yet again 👑🙌Hats off to @dop_ravivarman ‘s Picturesque depiction.@arrahman music-Riveting!Full 3hrs intrigues U for the sequel.Hail to the vast Army that made this epic!

— Shankar Shanmugham (@shankarshanmugh) October 5, 2022