இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாக்கியராஜ் கண்ணன்.முதல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரெமோ என்ற செம ஹிட் படம் ஒன்றை கொடுத்தார்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது

அடுத்ததாக கார்த்தி நடித்த சுல்தான் படத்தினை இயக்கியிருந்தார்.இந்த படம் 2021-ல் கொரோனாவை கடந்து திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் அடிக்க தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக அவதரித்தார் பாக்கியராஜ் கண்ணன்.

கடந்த அக்டோபர் 2020-ல் ஆஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார் பாக்கியராஜ் கண்ணன்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன.அடுத்த படத்தினை விரைவில் தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது பாக்கியராஜ் கண்ணன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.பாக்கியராஜ் கண்ணன்-ஆஷா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை பாக்கியராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.