தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக, பல கோடி ரசிகர்களின் அபிமான கதாநாயகனாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்துமுடிந்த 67வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றார்.

முன்னதாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின், ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தற்போது அந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்,

ரஜினிகாந்த் அறக்கட்டளை இணையதளம், 26 டிசம்பர் 2021 அன்று மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டது.
இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்ம விபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. கல்வி எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளைத் தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். 
நம் அறக்கட்டளை "சிறிய ஆரம்பம், நிலையான முயற்சி, சுயத் திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும்" என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச TNPSC குரூப் தேர்வுப் பயிற்சிக்கான "சூப்பர் 100 பிரிவு" பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பதிவு செய்ய இந்த இணையதள முகவரியைப் பின்தொடரவும்: http://rajinikanthfoundation.org/tnpsc.html

எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான ரஜினிகாந்த் அறக்கட்டளையின் இந்த இணையதளம் மற்றும் சேவை பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.