"சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் சார் கேட்டாரா?"- சந்திரமுகி 2 விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சந்திரமுகி 2 பட விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்,raghava lawrence about superstar title in chandramukhi 2 event | Galatta

இயக்குனர் P.வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக மீண்டும் இயக்குனர் P.வாசு அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் விழாவில் மேடையில் பேசிய நடிகர் கூல் சுரேஷ் நிறைய இடங்களில் ராகவா லாரன்ஸ் அவர்களை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள், “கூல் சுரேஷ் என் மேல ரொம்ப அன்பு வச்சுட்டு இருக்கிறவரு அந்த அன்பால என்ன சொல்லிட்டாருன்னா “சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்”னு சொல்லிட்டாரு நிறைய இடத்துல, இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை நிறைய ஓடிக்கிட்டு இருக்கு… அந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு இப்போது என்னை கம்பேர் பண்ணி பேசியதால் அதுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேணும்னு விஜய் சார் கேட்டாரா? கேட்கல அவர் எங்காவது அறிவித்தாரா? நான் எப்போது போய் விஜய் சாரை பார்த்தாலும் தலைவர் எப்படி இருக்காரு அவரு உடம்பு எப்படி இருக்குன்னு தான் கேட்பார். அவருக்கு இவர் மேல மரியாதை இருக்கு… அதே மாதிரி சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம்  பீஸ்ட் படம் பரவாயில்லை என சொன்னால் கூட “இல்லப்பா படம் சூப்பரா இருக்கான்பா கலெக்ஷன் செமையா இருக்கும் பா நல்லா போயிட்டு இருக்குனு சன் டிவில சொன்னாங்க”ன்னு தான் சொல்லுவாரு… இவங்க ரெண்டு பேருக்குள்ளே எந்த பிரச்சனையும் இல்லை. இதுக்கு ஒரு குட்டி கதை சொல்லுனும்னு இருக்கேன் ஆல்ரெடி ஒரு சேனல் கூட சொல்லி இருக்கேன். ஒரு மாங்கா மரம் ஒரு தேங்கா மரம் ஓகே தேங்காய் மரத்துல மாங்கா முளைக்கணும்னு நினைச்சா முளைக்குமா முடியாது அதே மாதிரி மாங்கா மரத்துல தேங்காய் முளைக்கணும்னு நினைச்சா முடியாது. மாங்கா மரம் மாங்கா கொடுக்கும் தேங்கா மரம் தேங்கா கொடுக்கும். கடவுளால் விதிக்கப்பட்ட விதி. இரண்டு மரங்களுக்கும் வேறு வேறு, ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில் தான் வளர்கிறது. எப்படி நாம் அதை பிரித்து பார்க்க முடியும் ஒரே தாய் ஒரே மண். ஆனால் இடையில ஒருத்தர் வந்து அந்த மாங்கா மரத்தில் தேங்காய் முளைக்குதாம்னு சொல்லிட்டு போயிட்டாரு... அத பாத்து எல்லோருமே மாங்கா மரத்துல தேங்காய் முளைக்கு தான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க எங்க போனாலும் மாங்கா மரத்துல தேங்காய் முளைக்கு தான்னு எல்லாரும் சொன்னா… எல்லா இடத்திலும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் இவர்தான்னு சொன்னால் நாம் என்ன சொல்ல முடியும். எனவே மாங்கா மரத்துக்கு நன்றாக தெரியும் நாம் மாங்கா தான் முளைக்கிறோம்னு தேங்காய் மரத்துக்கு நன்றாக தெரியும் நான் தேங்காய் தான் கொடுக்கிறேன் என்று, நடுவுல இந்த வியாபாரம் பண்ணுகிறார்கள் பார்த்தீர்களா எல்லாரிடமும் போய் கேட்கிறார்கள் பார்த்தீர்களா அதெல்லாம் வேண்டாம் விட்டுவிடுங்கள். எல்லோருமே இங்கே அண்ணன் தம்பியாக இருக்கிறார்கள் இங்கே ஒரு குடும்பமாக இருக்கிறது. அதில் நடுவில் புகுந்து பிரிக்கிறார்கள். இனிமேல் யாராவது வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் தேங்காய் மரத்தில் தேங்காய் தான் முளைக்கும் மாங்கா மரத்தில் மாங்காய் தான் முளைக்கும் அர்த்தமாய்ந்த ராஜா என போய்க்கொண்டே இருங்கள்.” என பதில் அளித்துள்ளார். ராகவா லாரன்ஸ் பேசிய அந்த முழு வீடியோ இதோ…