விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடந்தது என்ன?-  விளக்கமளித்த SJசூர்யா! வைரல் வீடியோ

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து பேசிய SJசூர்யா,sj suryah opens about accident at mark antony shoot | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக மக்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் SJ.சூர்யா நடிப்பில் வரும் மார்க் ஆண்டனி படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் இணைந்து SJ.சூர்யா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக  வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் வெற்றியாக பேட்டி அளித்த sd சூர்யா அவர்கள் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்து குறித்து கேட்டபோது, ஆமாம் அந்த லாரியில் பார்த்தீர்கள் என்றால் முன் பக்கம் முழுக்க கவர் செய்யப்பட்டு இருக்கிறது விஷால் சார் இந்த இடத்தில் இருக்கிறார் நான் அவர் அருகில் இருக்கிறேன் அங்கே உடைத்துக் கொண்டு அந்த லாரி எங்களை நோக்கி நேராக வருகிறது அது உடைத்து வந்து எங்களுக்கு அருகில் வருவதற்கு முன் பிரேக் போட வேண்டும் ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கில் பிரேக் பிரேக் என சொல்கிறார். அந்த டிரைவர் அந்த லாரி இடித்த சத்தத்தில் பயந்துவிட்டார் லாரி நேராக வர அவருக்கு சத்தம் கொடுக்க அவர் பயத்தில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். லாரி நேராக வருகிறது நான் பார்க்கும் போது ஒரு கட்டத்தில் எங்கள் அச்சில் இருந்து விலகி லாரி திரும்பிவிட்டது. விஷால் சாருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனக்கும் எந்த ஆபத்தும் இல்லை ஆனால் இடது புறம் இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்பது தான் என்னுடைய கவலையாக இருந்தது இவற்றையெல்லாம் நினைத்து முடிப்பதற்குள் நேராக உள்ளே சென்று தடதடவென அடித்து நொறுக்கி விட்டது அவர் நேராக வந்திருந்தால் என்றால் எங்கள் இருவருக்குமே சிக்கல் தான். கடவுளின் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை ஒருத்தருக்கும் எதுவும் ஆகவில்லை போய் லாரியின் கதவை திறந்து பார்த்தால் ஒரு அங்குலம் தான் இடைவெளி இருக்கிறது அவர் பார்ப்பதற்கு அந்த அளவிற்கு கலை இயக்குனர்கள் முழுவதுமாக அதை டிசைன் செய்திருக்கிறார்கள் அப்புறம் அவரிடம் இதை எப்படி ஓட்டி வந்தாய் எனக் கேட்டோம்.” என்றார். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட SJ.சூர்யா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…