தன் உடல் எடையை குறைத்து கவனம் ஈர்த்த பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தன் இரண்டாம் கட்ட ஆட்டத்தை ஆட தொடங்கினார் சிம்பு. அவரின் கம்பேக் மூலம் அதிரடியாய் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் அவருக்கு சமீப காலமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமல்லாமல் அவரின் மீதும் ஒரு அபிப்பிராயத்தையும் உண்டாக்கி வருகின்றது என்பது  குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் அமோக வரவேற்பு பெற்றது. மேலும் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்தையும் படத்தின் இறுதி காட்சியிலே வெளியிட்டு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  

அதன்பின் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா உடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மற்றும் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக்,கலையரசன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்திற்கான இறுதிகட்ட வேலை நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கர் பத்து தல படத்திற்கான தனது டப்பிங் பங்கை நிறைவு செய்து விட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பத்து தல டப்பிங் நிறைவடைந்தது. இந்த அனுபவத்தை அழகாகவும் வேடிக்கையாகவும் மாற்றியதற்கு இயக்குனர் கிருஷ்ணா மற்றும் படக்குழுவிற்கு நன்றி. நல்லதோர் தொடக்கத்தை இந்த புத்தாண்டிலிருந்து அனைவரும் பெறுவோம்” என்று குறிப்பிட்டு இத்துடன் டப்பிங்கின் போது குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். 

That’s a dubbing wrap for #PathuThala
Thank you @nameis_krishna sir and the entire team for making the experience a fun and lovely. Let us all have a happy start to a happiest new year ❤️ #PathuThalaFromMarch30 @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @StudioGreen2 pic.twitter.com/6lNWxucyxL

— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 3, 2023

 

மேலும் பத்து தல படம் வரும் மார்ச் மாதம் 30ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.