சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகும் தொடர்ந்து தமிழ் திரையுலகிற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சூர்யா பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக திகழ்கிறார். கடைசியாக சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெற்றிமாறனுடன் இணையும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. சென்னையிலுள்ள ஈசிஆரில் ஜல்லிக்கட்டு காண பிரத்தியேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த TEST SHOOTல் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

இதனையடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 28) பூஜையுடன் தொடங்கியது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ளது. 

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், G.V.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் உப்பெண்ணா, ஷ்யாம் சிங்கா ராய் & பங்காருராஜு ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (மார்ச் 28) நடைப்பெற்ற இத்திரைப்படத்தின் பட பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…