பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் வெற்றிமாறன்.இதனை அடுத்து ஆடுகளம்,விசாரணை என தனது ஸ்டைலில் வித்தியாசமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

தனுஷுடன் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த இவர் அசுரன்,வடசென்னை என வெற்றிகளை கொடுத்து மாஸ் ஹீரோக்களை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் கையாள முடியும் என நிரூபித்தார்.அடுத்ததாக சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தினை இயக்கிவருகிறார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.பெரிய ஹீரோக்களை வைத்து வெற்றிமாறன் எப்படி படம் எடுக்கவுள்ளார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.வெற்றிமாறனுக்கு சில முன்னணி நடிகர்களிடம் கதை கூறியுள்ளதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தளபதி விஜயிடமும் வெற்றிமாறன் கதை சொல்லி இருப்பதாகவும் விரைவில் அந்த படம் உருவாகும் என்று தெரிவித்தார்.வெற்றிமாறனுடன் தொடர்ந்து பணியாற்றும் ஜீ.வி.பிரகாஷ் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது விஜய்-வெற்றிமாறன் படம் வெகுவிரைவில் நடக்கும் இருவரும் பிஸியாக இருப்பதால் படம் தள்ளிப்போகிறது,இருவரும் தங்கள் படங்களை முடித்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.விரைவில் இந்த காம்போ வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பாத்து வருகின்றனர்