வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஒரு போலீஸ்காரரின் மனைவி பாத்ரூமில் இருக்கும் போது, அவரை மற்றொரு போலீஸ்காரர் வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்து உள்ள வன்னியம்பட்டி போலீஸ் சரகத்தில் மொட்டமலை என்னும் பகுதி இருக்கிறது. 

இங்கு, 11 வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு போலீஸ்காரராக திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், பணிபுரிந்து வருகிறார். 

இவரது மனைவி 27 வயதான வீரலட்சுமி, குடும்பத்தினருடன் அங்குள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

அதே போல், இதே குடியிருப்பில் மற்றொரு போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த 38 வயதான ஆனந்த் என்பவர், குடியிருந்து வருகிறார். 

இந்த சூழலில் தான், சம்பவத்தன்று திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி வீரலட்சுமி, அவரது வீட்டில் உள்ள பாத்ரூமில் இருந்து உள்ளார்.

அப்போது, அதே குடியிருப்பில் வசித்து வந்த மற்றொரு போலீஸ்காரரான ஆனந்த், வீரலட்சுமி பாத்ரூமில் இருப்பதை தனது செல்போன் மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தார் என்று கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த வீரலட்சுமி கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, போலீஸ்காரர் ஆனந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “சம்மந்தப்பட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் இடேயே வேறு எதாவது விரோதம் இருக்கிறதா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.